பார்போற்றும் படைப்பாளி – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Wed, 07 Aug 2019 09:11:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் /2019/08/03/murasoli-tribute-to-kalaignar/ /2019/08/03/murasoli-tribute-to-kalaignar/#respond Sat, 03 Aug 2019 15:30:38 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=861 The post மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் – முரசொலி செல்வம்

நிறைந்து வாழும் கலைஞர் – இது தனது தந்தைக்கு மூத்த பிள்ளை “முரசொலி” தொகுத்தளிக்கும் மலர்! தலைவர் கலைஞரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “முரசொலி”யின் இந்த முயற்சி, இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துவதைப் போன்றதுதான்! காலம் பலரது பயணத்தை ஏனோ முடிக்கிறது! அப்படித்தான் ஓராண்டுக்கு முன் கலைஞரின் நெடிய பயணத்தை முடித்ததாகக் கருதி இருந்தது!

காலம் நினைத்தது ஒன்று, நடந்ததோ வேறு! கடந்து சென்ற ஓராண்டு காலமும் தமிழகம் கலைஞரோடுதான் பயணித்துள்ளது! ஆம்; அதனைப் பயணிக்க வைத்தவர் நமது தளபதி! “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” – என எண்ணிப் பெருமிதம் கொள்ளும் வகையில், தனது, “அப்பா”வாக மட்டுமின்றி, தான், “தலைவர்” ஆகவும் ஏற்றுக்கொண்ட, தன் தந்தையின் புகழ், மங்காது காத்திட சிலைத் திறப்பு நிகழ்ச்சிகள், புகழஞ்சலிக் கூட்டங்கள் என நடத்தி வருகிறார் தளபதி. அந்த நிகழ்ச்சிகளில் இன்றைய சமுதாயம் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருக்கும் பலரை நெஞ்சு நெகிழப் பேச வைத்தார். அவர்களோ, அவர்கள் பார்த்துப் பிரமித்த ஒரு மாமனிதர் குறித்து உயர்வு நவிற்சியின்றி எடுத்துரைத்த உண்மைகளின் தொகுப்பை உள்ளடக்கி வருவதுதான் “நிறைந்து வாழும் கலைஞர்” மலர்.

தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்கள் பலவற்றின் தாளாக, அதில் பதிந்த எழுத்தாக, அதற்கான காரணமாக, காரணியாக, உந்துதலாக விளங்கிய மனிதாபிமானம் மாண்புடைத் தலைவனுக்கு, “முரசொலி” எடுத்திடும் இந்த மலர், காலக் கருவூலமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நினைவு மலர் சிறப்பாக அமைய அட்டைப் படத்திலிருந்து பக்கத்துப் பக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குத் தனது ஓயாத பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி, மலர்க் குழுவினரோடு அன்றாடம் அமர்ந்து தக்க ஆலோசனைகளைத் தந்தார் தளபதி. “அவாள் மலருக்கு சவால்” – என “முரசொலி” வெளியிட்ட முதல் பொங்கல் மலரிலிருந்து, மாநாட்டு மலர்கள், அண்ணா பிறந்த நாள் மலர்கள் என வெளிவந்த பல மலர்கள் கலைஞரின் மேற்பார்வையில் அவரது ஆலோசனைகளை ஏற்று வெளி வந்துள்ளன.

ஒவ்வொரு நாளும், தன் ஓய்வற்ற பணிகளுக்கிடையே சில மணிகளை ஒதுக்கி மலர் வேலைகளைக் கண்காணிப்பார் கலைஞர். இன்று மலர்ப் பணிகளில் தளபதி காட்டிடும் முனைப்புகளை, ஆர்வத்தைக் காணும்போது, அங்கேயும் “கலைஞர்” தான் தென்படுகிறார்! “காக்கைச் சிறகினிலே நந்த லாலா – நின்றன் கரியநிறந் தோன்றுதையே, நந்த லாலா!” – என்பது போல, “தளபதி” யின் கடின உழைப்பிலே தலைவர் “கலைஞர்” தெரிகிறார். அட்டைப் படம் எப்படி அமைய வேண்டும், பக்கங்களின் வடிவமைப்பு எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையெல்லாம் மலர்க் குழுவினருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்!

கழகத் தலைவர் தளபதியின் மேற்பார்வையில் மலர் சிறந்து விளங்க இரவு பகல் பாராது உழைத்திட்ட மலர்க் குழுவைச் சேர்ந்த முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், கலைஞர் செய்திகள் ஆசிரியர் ப.திருமாவேலன், புலவர் முத்து.வாவாசி ஆகியோருக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு மற்றும் தலைவர் கலைஞரின் செயலாளர்களாகச் செயல்பட்ட முனைவர் கே.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., கே.சண்முகநாதன் முதலியோருக்கும், உடனிருந்து ஒத்துழைப்பு நல்கிய முரசொலி ஆசிரியர் குழுவினருக்கும், அலுவலர்களுக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் மலர் அழகுற அமைய அருந்துணையாக இருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ, அவர்களுக்கும், அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்தினருக்கும் “முரசொலி” சார்பில் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முரசொலி செல்வம்
ஆசிரியர் – முரசொலி நாளிதழ்

The post மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/murasoli-tribute-to-kalaignar/feed/ 0
கலைஞரின் நாடகங்கள் /2019/08/03/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ /2019/08/03/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Sat, 03 Aug 2019 14:15:20 +0000 /?p=2979 The post கலைஞரின் நாடகங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

கலைஞரின் நாடகங்கள்

தமிழ் சொல்லுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு கலைஞரின் நாடகங்கள் ஒரு சாட்சி. நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில் அவர் வித்தகர்.  சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசியல் செய்திகள் போன்றவை அவரது நாடகங்களில் பின்னிப் பிணைந்திருக்கும். அடித்தள மக்களின் அவலக் குரல் அவரின் நாடகத்தில் எதிரொலித்தன இவையே பிற்காலத்தில் அவரது அரசியல் நோக்கங்களுக்கு துணை செய்தன.

நாடகத்தைப் பற்றி கலைஞர் கூறுகையில் “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை அதனால்தான் அரசியல் கருத்துக்களை பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளி தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்றார்.

“தூக்குமேடை, மகான் பெற்ற மகான்” போன்றவை அவரது சமூக சீர்திருத்த நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அதேபோல் நச்சுக்கோப்பை, சாக்கிரட்டீசு போன்ற நாடகங்கள் மூடநம்பிக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்தன.

“குடிசைதான் ஒருபுறத்தே கூரிய வேல் வாள் வரிசையாய் வைத்திருக்கும்” எனத் தொடங்கும் புகழ்மிக்க வசனம் இடம்பெற்ற நாடகம் “பரப்பிரம்மம்”. புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தஞ்சை புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கலைஞர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், ராமாயணத்தை கிண்டல் செய்து எழுதிய பரதாயனம் போன்ற இலக்கிய நாடகங்கள் பலவற்றை கலைஞர் தனக்கே உரிய தனித்தன்மையுடன் எழுதினார்.

கலைஞரின் “திருவாளர் தேசியம்பிள்ளை” போன்ற நாடகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் கட்சியை நையாண்டியுடன் விமர்சிப்பதாக அமைந்திருக்கும். திமுகவிற்கு உதயசூரியன் சின்னமாக கிடைத்த பிறகு அதனை பிரபலப்படுத்துவதற்காக “உதயசூரியன்” என்ற பெயரிலேயே நாடகம் ஒன்றை இயற்றினார் கருணாநிதி.  இப்படி நாடகத்தை சமூக மாற்றம், பகுத்தறிவு, போன்றவற்றுடன் தேர்தல் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் கலைஞர் திறமையுடன் கையாண்டார்.

கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கற்றப்பட்டது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அறங்கேற்றம் செய்யப்பட்டது.  ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’  உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர்.

‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதிய கலைஞர், அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார்.  1957-ம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக, ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார்.

The post கலைஞரின் நாடகங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
புதினங்கள் /2019/08/01/novels/ /2019/08/01/novels/#respond Thu, 01 Aug 2019 15:39:53 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=869 The post புதினங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

புதினங்கள்

கலை என்பது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய வாழ்க்கைக்கு பயன்படாத சொற்குவியல்களாக, பொழுதுபோக்காக மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்று கருதுபவர் கலைஞர். அதன் அடிப்படையிலேயே அவர் தமிழ் உலகிற்கு வழங்கிய 16 புதினங்களும் பகுத்தறிவையும் வளர்ப்பதாக, சாதி மத பேதங்களின் ஒழிப்பை வலியுறுத்துவதாக, போலித்தனமான வாழ்க்கையை சாடுவதாக, தமிழரின் பழம் பெருமைகளை போற்றுவதாக, மண வாழ்க்கையில் ஆண் பெண் சமத்துவத்தை குறிப்பதாக அமைந்திருக்கும்.

அவரது முதல் நாவலான “புதையல்”- மூடத்தனத்தில் முக்கிய மனிதர்கள் புதையலை அடைவதற்காக செய்யும் மிருகத்தனமான உயிர் பலிகள், போலிச்சாமியார்களின் கயமை போன்றவற்றை எடுத்துக்காட்டி பகுத்தறிவது வெளிச்சத்தை பாய்ச்சுவதாக அமைந்திருக்கும்.

ஒரே ரத்தம் என்ற புதினத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் துன்பங்களையும், அந்த மக்கள் தங்கள் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார். மிக முக்கியமாக கலப்புமணம் பெருகவேண்டும் என்ற கருத்தையும் இந்த புதினத்தில் வலியுறுத்தியிருப்பார்.

கலைஞருக்கு தமிழ்ப் பல்கலைகழகத்தின் படைப்பிலக்கியம் பரிசை பெற்றுக் கொடுத்த புதினம் தென்பாண்டிச் சிங்கம். அழகு நடையில் எழுதப்பட்ட இந்த நாவல் வரலாற்று நிகழ்வுகளை புள்ளிவிவபரங்களோடு எடுத்துரைப்பதோடு நில்லாமல், தற்கால சூழலுடன் அவற்றைப் பொருத்தி சமூகத்தை விழிப்படைய செய்வதாக அமைந்திருக்கும்.

தனது “ஒரு மரம் பூத்தது” என்னும் நாவலின் மூலம் விதவை மறுமணத்தை பற்றி சமுதாயத்திற்கு பக்குவமாக புரிய வைத்திருப்பார் கலைஞர்

The post புதினங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/01/novels/feed/ 0
கவிதைகள் /2019/07/30/poetry/ /2019/07/30/poetry/#respond Tue, 30 Jul 2019 15:42:52 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=872 The post கவிதைகள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

கவிதைகள்

கலைஞரின் கவிதைகளைப் பற்றி மு.மேத்தா கூறுகையில் அவரது கவிதைகள் மரபும் அல்ல புதியதும் அல்ல “புதுமரபுக் கவிதைகள்” என்கிறார். ஏனெனில் அவரது கவிதைகளில் யாப்பு, எதுகை, மோனை என மரபுக் கவிதைகள் போன்று அனைத்து இலக்கண நயமும் பொருந்தி இருக்கும். அதேசமயம் புதுமைகளைப் புகுத்த மரபை தனக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை.

1938 ஆம் ஆண்டு தனது 14 வயதில் “ஓடி வந்த இந்திப் பெண்ணே நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” எனத் தொடங்கும் பாடல் வரிகளுடன் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கி தனது இறுதிக்காலம் வரை தமிழ் உலகிற்கு எண்ணற்ற கவிதைகளை வழங்கியுள்ளார்.

கலைஞர் பற்றி வைரமுத்து கூறும் பொழுது “தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முன்னுதாரணம் இல்லாத முதல் உதாரணம் முத்தமிழறிஞர் கலைஞர்” என்பார்.

கவிஞர் இளையபாரதி ” உயிரோடு இருப்பது வேறு , உயிர்ப்போடு இருப்பது வேறு. தன் ஒவ்வொரு கணத்தையும் உயிர்ப்போடு வைத்திருப்பவர் கலைஞர் அதற்கான ரகசியம் அவரது கவித்துவம்” என்று கலைஞரின் கவி மனத்தைப்பற்றி சிலாகிப்பார்.

அவரது முதல் கவிதைத் தொகுப்பின் பெயரே “கவிதையல்ல” என்பதுதான் இதுவே அவரது கவித்துவத்திற்கு ஒரு சான்று.

கலைஞரின் கவிதை மழை என்னும் கவிதைத் தொகுப்பு நூல் 1707 பக்கங்களைக் கொண்டது. 1988 முதல் 2004 வரை 68 ஆண்டுகள் கலைஞர் எழுதிய கவிதைகளை 210 தலைப்புகளில் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

அண்ணாவிடம் இதயத்தை இரவலாக கேட்ட அவலச் சுவைமிகுந்த இரங்கல் கவிதைகள்,
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கவிதைகள்,
இந்திரசித், வாலி போன்ற மாற்று கதாநாயகர்களைப் பற்றிய புதிய பரிணாமத்தை வழங்கும் கவிதைகள்,
கவியரங்கில் பல்வேறு தலைப்புகளில் பாடிய கவிதைகள்,
பகுத்தறிவை, மொழி உணர்வை ஊட்டும் புரட்சிகர கவிதைகள்

என கலைஞரின் கவி வாழ்வு பல்வேறு சுவைகளையும், உணர்வுகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு ஊட்டியுள்ளது.

The post கவிதைகள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/30/poetry/feed/ 0
கடித இலக்கியங்கள் /2019/07/29/letters/ /2019/07/29/letters/#respond Mon, 29 Jul 2019 14:33:37 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1190 The post கடித இலக்கியங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

கடித இலக்கியங்கள்

கதைகளிலும் இதழ்களிலும் நூல்களிலும் கடித வடிவத்தை ஒரு உத்தியாக கொண்டு கட்டுரை வரைவதை புனைவுக்கடிதம் எனலாம். தமிழில் இந்த முயற்சியை முதலில் தொடங்கியவர் “மு.வ” அவரைத் தொடர்ந்து அண்ணா எனது “தம்பிக்குக் கடிதம்” மூலம் இதனை மிக அழகாக கையாண்டார். அண்ணாவை தொடர்ந்து எழுதத் தொடங்கிய கலைஞர் கடிதம் இலக்கியத்தை ஒரு சொல்லின் மூலம் மரபு மாறாமல் இறுதிவரை எழுதினர்.

 

பொதுவாக கட்சித் தொண்டர்களுக்கு உடன்பிறப்பே என்ற விளிப்புடன் கடிதத்தை துவங்குவார்.  அதுபோக பழைய நண்பனே, மாஜி நண்பா என்ற விளிப்புடனும் சில கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதியிருப்பார். 

 

கலைஞரின் கடிதங்கள் அரசியல் செய்திகளோடு நாட்டு நிகழ்வுகளையும் பொருளாதார, கலாச்சார, சமுதாய துறைகளில் போக்குகளையும் ஆய்வு செய்வதாக அமைந்திருக்கும். அவரது கடிதங்களில் முக்கிய கூறுகளாக சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உணர்வு ஆகியவையுடன் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியத்தின் செல்வாக்கும் மிகுந்திருக்கும்.

படிப்பவரின் உள்ளத்தில் எளிமையாக தான் கூற நினைக்கும் கருத்துக்கள் சென்று சேரும் வகையில் “குட்டிக்கதைகள், உருவகக்கதைகள், உவமை உருவகம், பண்பாட்டுத் தலைவர்கள் வரலாற்று நாயகர்கள், இலக்கியவாதிகள், போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள்” போன்றவற்றை தம் கருத்துக்களை விளக்குவதற்கு உத்தியாக கையாண்டார். 

கடிதங்களில் அவரது மொழி நடை அலாதியானது அவை தன் தொண்டர்களை போராட அழைக்கும் பொழுது “வீரத்தின் திருவுருவே! மான மரபின் குலவிளக்கே! என உணர்வுபூர்வமாகவும்”அதே சமயம் கட்டளையிடும் பொழுது உள்ளம் கொள்ளத் தக்கதாகவும், சில சமயங்களில் அணுக்கமான உரையாடல் வடிவிலும் அமைந்திருக்கும்.

The post கடித இலக்கியங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/29/letters/feed/ 0
திரைப்படங்கள் /2019/07/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ /2019/07/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Sat, 27 Jul 2019 10:21:18 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1007 The post திரைப்படங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

திரைப்படங்கள்

திராவிட இயக்கம் வலுப்பெறத் தொடங்கிய பிறகு மக்களை சென்றடையக் கூடிய அனைத்து கருவிகளையும் மிக சாதுரியமாகக் கையாண்டது. அப்படி ஒரு வலுவான கருவிதான் திரைப்படம். அத்தகைய திரைத்துறையில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கியவர் கலைஞர் கருணாநிதி.

 

குறிப்பாக அதுவரை மக்களால் திரைப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? யார் இயக்குகிறார்கள்? என்றெல்லாம் பேசப்பட்ட காலம் போய், யார் வசனம் எழுதியிருக்கிறார்கள்? என்று கேட்க வைத்து திரைப்பட வசனத்திற்கு ஒரு மாபெரும் இலக்கிய மரியாதையையும் பெற்றுத் தந்தவர் கலைஞர். 

 

திரைத்துறையில் கலைஞர் தனக்கென ஒரு இலக்கியம் கலந்த தனி நடையை உருவாக்கினார். 

 

கலைஞர் கதை வசனம் எழுதிய திரைப்படங்களை

பகுத்தறிவு பேசுபவை – (பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்)

அரசியல் பேசுபவை – (புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி வண்டிக்காரன் மகன்)

சமூக முன்னேற்றம் பற்றி பேசுபவை – (மருதநாட்டு இளவரசி, பணம்,நாம், திரும்பிப் பார்)

பெண்ணுரிமை பற்றி – (மணமகள், ராஜா ராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள்)

இலக்கியம் பற்றிப் பேசுபவை – (அபிமன்யு பூம்புகார், உளியின் ஓசை)
என வகைப்படுத்தலாம்.

கதை வசனம் மட்டும் அல்லாது கலைஞர் பல திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார் அவற்றில் தமிழுணர்ச்சி, சமுதாயக் கண்ணோட்டம், திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் போன்றவை மிளிர்வதைக் காணலாம்.

 

1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படம்தான், கலைஞர் முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம். எம்.ஜி.ஆர் நாயகன் வேடம் ஏற்று நடித்த முதல் திரைப்படமும் ‘ராஜகுமாரி’தான். 

 

1950-ம் ஆண்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் 500 ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்த கலைஞர், அங்கு சில திரைப்படங்களில் பணியாற்றினார். 

 

1952-ல், கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழகத்தின் புகழ்பெற்ற நடிகராக சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தியதும் இந்தப் படம்தான்.‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற சமூக நோக்கில் அமைந்த கூர்மையான வசனங்கள், திரைப்படத் துறையை புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது.

 

1950-களிலில் இருந்து 1970-கள்வரை, தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவரும் தலைவர் கலைஞர்தான். சிவாஜிக்கு ‘பராசக்தி, மனோகரா’வும், எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரி குமாரி’, ‘மலைக்கள்ளன்’ ஆகியவையும் திருப்புமுனையாக அமைந்தன. 

 

கலைஞர் கதை – வசனத்தில், மொத்தம் 9 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். ஆரம்பகாலங்களில், கலைஞரை ‘ஆண்டவரே’ என்று அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.

The post திரைப்படங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
படைப்பு பெட்டகம் கலைஞர் /2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/ /2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/#respond Fri, 26 Jul 2019 10:47:43 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1038 The post படைப்பு பெட்டகம் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

படைப்பு பெட்டகம் கலைஞர்

1. வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968
2. சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) 1968
3. வான்கோழி 1978
4. புதையல் 1975
5. ஒரே ரத்தம் 1980
6. ஒரு மரம் பூத்தது
7. அரும்பு (குறும் புதினம்) 1978, அரும்பு (குறும் புதினம்) 1983
8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)
9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
10. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953

1. பலிபீடம் நோக்கி 1947
2. ரோமாபுரிப் பாண்டியன் 1974
3. பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988
4. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
5. தென்பாண்டிச் சிங்கம் 1983
6. தாய் – காவியம்

1. குறளோவியம் (குறுநூல்) 1956
2. குறளோவியம் (முதல் பதிப்பு) 1985
3. தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982
4. சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்)
(முதல் பதிப்பு) 1987
5. திருக்குறள் கலைஞர் உரை
(முதல் பதிப்பு) 1996
6. தொல்காப்பியப் பூங்கா 2003

1. கலைஞர் கடிதம் தொகுதி -1 1986
2. கலைஞர் கடிதம் தொகுதி -2 1986
3. கலைஞர் கடிதம் தொகுதி -3 1986
4. கலைஞர் கடிதம் தொகுதி -4 1986
5. கலைஞர் கடிதம் தொகுதி -5 1986
6. கலைஞர் கடிதம் தொகுதி -6 1986
7. கலைஞர் கடிதம் தொகுதி -7 1986
8. கலைஞர் கடிதம் தொகுதி -8 1986
9. கலைஞர் கடிதம் தொகுதி -9 1986
10. கலைஞர் கடிதம் தொகுதி -10 1986
11. கலைஞர் கடிதம் தொகுதி -11 1996
12. கலைஞர் கடிதம் தொகுதி -12 1996
13. கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்

1. கவிதையல்ல 1945
2. முத்தாரம்
(சிறையில் எழுதிய
கவி வசனங்கள் தொகுப்பு)
3. அண்ணா கவியரங்கம் 1968
4. Pearls (Translation) 1970
5. கவியரங்கில் கலைஞர் 1971
6. கலைஞரின் கவிதைகள் 1977
7.வாழ்வெனும் பாதையில்,
கவியரங்கக் கவிதை
8. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
9. கலைஞரின் கவிதை மழை 2004

1. உணர்ச்சி மாலை 1951
2. பெருமூச்சு 1952
3. விடுதலைக்கிளர்ச்சி
(இரண்டாம் பதிப்பு) 1952
4. களத்தில் கருணாநிதி 1952
5. பேசும் கலை வளர்ப்போம் 1981
6. பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
7. யாரால்? யாரால்? யாரால்?
(முதல் பதிப்பு) 1981
8. மலரும் நினைவுகள் 1996
9. இலங்கைத் தமிழா, இது கேளாடீநு! 1981
10. திராவிடசம்பத்து 1951
11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
12. உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
13. இருளும் ஒளியும்
14. சரித்திரத் திருப்பம்
15. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
16. மயிலிறகு 1993
17. அகிம்சா மூர்த்திகள் 1953
18. அல்லி தர்பார் 1953
19. இன முழக்கம்
20. உணர்ச்சி மாலை
21. கருணாநிதியின் வர்ணனைகள் 1952
22. சுழல் விளக்கு 1952
23. துடிக்கும் இளமை
24. நாடும் நாடகமும் 1953
25. விடுதலைக் கிளர்ச்சி 1952

1. சங்கிலிச் சாமியார் 1945
2. கிழவன் கனவு 1948
3. பிள்ளையோ பிள்ளை 1948
4. தப்பிவிட்டார்கள் 1952
5. தாய்மை 1956
6. கண்ணடக்கம் 1957
7. நாடும் நாடகமும் 1953
நாடும் நாடகமும் 1968
8. முடியாத தொடர்கதை 1982
9. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
1977, 1982
10. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
(நான்காம் பதிப்பு) 1991
11. 16 – கதையினிலே 1995
12. நளாயினி
13. பழக்கூடை 1979
14. வாழ முடியாதவர்கள்
15. தேனலைகள் 1985
16. ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979

1. இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973
2. இந்தியாவில் ஒரு தீவு 1978
3. ஆறுமாதக் கடுங்காவல் 1985
4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
முதல் பதிப்பு 1975
5. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)
முதல் பதிப்பு 1987
6. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம் –
முதல் பதிப்பு) 1997
7. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)
முதல் பதிப்பு 2003
8. நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)
முதல் பதிப்பு ஜூன் 2013
9. நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)
முதல் பதிப்பு அக்டோபர் 2013
10. கையில் அள்ளிய கடல்
(பேட்டிகளின் தொகுப்பு) 1998

1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள்
( முதல் பதிப்பு) 1978
2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
4. கலைஞரின் நவமணிகள் 1984
5. சிந்தனை ஆழி 1953
6. கருணாநிதியின் கருத்துரைகள்
(முதல் தொகுப்பு) 1967
7. கலைஞரின் கருத்துரைகள் 1971
8. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
9. கலைஞரின் சொல்நயம் 1984
10. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்
முதல் பதிப்பு 1994
11. கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள்
12. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
13. கலைஞரின் உவமை நயங்கள் 1972

(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)
1. சாந்தா (அ) பழனியப்பன்
(நான்காம் பதிப்பு) 1943
(நச்சுக்கோப்பை) 1985
2. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
3. மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956
4. தூக்கு மேடை 1951
5. உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
6. ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964
7. திருவாளர் தேசியம்பிள்ளை
(இரண்டாவது பதிப்பு)1967
8. சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
9. பரதாயணம் 1978
10. புனித இராஜ்யம் 1979
11. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
12. காகிதப்பூ 1966
13. பரப்பிரம்மம் 1953
14. நானே அறிவாளி 1971
15. அனார்கலி 1967
16. சாக்ரடீஸ் 1967
17. உன்னைத்தான் தம்பி
18. சேரன் செங்குட்டுவன் 1978

1.கலைஞரின் சட்டமன்ற உரைகள் – 1
2. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -2
3. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -3
4. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -4
5. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -5
6. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -6
7. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -7
8. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -8
9. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -9
10. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -10
11. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -11
12. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -12

1. ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
2. அபிமன்யூ (வசனம்) 6.5.1948
3. மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950)
4. மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
5. தேவகி(கதை, வசனம்) 21.6.1951
6. மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
7. பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
8. பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
9. நாம் (கதை வசனம்) 05.03.1953
10. திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
11. மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954
12. மலைக்கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
13. அம்மையப்பன் (கதை, வசனம்) 24.9.1954
14. ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
15. ரங்கோன்ராதா
(திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
16. புதையல் ( கதை வசனம்) 16.5.1957
17. புதுமைப்பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
18. குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
19. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்)1.7.1960
20. அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
21. தாயில்லாப் பிள்ளை
(திரைக்கதை, வசனம்) 18.8.1961
22. இருவர் உள்ளம்
(திரைக்கதை, வசனம்) 29.3.1963
23. காஞ்சித் தலைவன்
(கதை, வசனம், பாடல்) 26.10.1963
25. பூம்புகார்
(திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
26. பூமாலை (கதை, வசனம், பாடல்)23.10.1965
27. அவன் பித்தனா?
(திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
28. மறக்க முடியுமா
(திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
29. மணிமகுடம்(கதை, வசனம்) 9.12.1966
30. தங்கத்தம்பி (கதை, வசனம்) 9.1.1967
31. வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
32. எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
33. பிள்ளையோ பிள்ளை
(கதை, வசனம்) 23.6.1972
33. அணையாவிளக்கு ( கதை) 15.8.1975
34. வண்டிக்காரன் மகன்
(திரைக்கதை, வசனம்) 30.10.1978
35. நெஞ்சுக்கு நீதி
(கதை, வசனம், பாடல்) 27.4.1979
36. ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
37. குலக்கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
38. மாடிவீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்)22.8.1981
39. தூக்குமேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
40. காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
41. பாலைவன ரோஜாக்கள்
(திரைக்கதை, வசனம்) 1.11.1986
42. நீதிக்குத் தண்டனை 1.5.1987
43. ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
44 மக்கள் ஆணையிட்டால்
(திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
45. பாசப்பறவைகள்
(திரைக்கதை, வசனம்) 29.4.1988
46. இது எங்கள் நீதி
(திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
47. பாடாத தேனீக்கள்
(திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
48. தென்றல் சுடும்
(திரைக்கதை, வசனம்) 10.3.1989
49 பொறுத்தது போதும்
(திரைக்கதை, வசனம்) 15.7.1989
50. நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
51. பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
52. காவலுக்குக் கெட்டிக்காரன்
(திரைக்கதை, வசனம்) 14.1.1990
53 . மதுரை மீனாட்சி
(திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
54. புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
55. மண்ணின் மைந்தன்
(திரைக்கதை, வசனம்) 4.3.2005
56 பாசக்கிளிகள்
( திரைக்கதை, வசனம்) 14.1.2006
57. உளியின் ஓசை
(திரைக்கதை, வசனம்) 4.7.2008
58. பெண்சிங்கம்
(திரைக்கதை, வசனம்) 3.6.2010
59. இளைஞன்
(திரைக்கதை, வசனம்)14.1.2011
60. பொன்னர் சங்கர்
(திரைக்கதை, வசனம்) 9.4.2011

1950 – மந்திரி குமாரி
1952 – பராசக்தி
1953 – நாம்
1954 – அம்மையப்பன்
1956 – ராஜா ராணி
1956 – ரங்கோன் ராதா
1960 – குறவஞ்சி
1963 – காஞ்சித்தலைவன்
1964 – பூம்புகார்
1965 – பூமாலை
1966 – மறக்க முடியுமா ?
1979 – நெஞ்சுக்கு நீதி
1982 – தூக்கு மேடை
1987 – வீரன் வேலுதம்பி
1987 – ஒரே ரத்தம்
1988 – மக்கள் ஆணையிட்டால்
1988 – இது எங்கள் நீதி
1993 – மதுரை மீனாட்சி

தொலைக்காட்சித் தொடராக வெளியான கலைஞரின் நாவல்

1. தென்பாண்டிச் சிங்கம்
2. இராமானுஜர் – மதத்தில் புரட்சி செடீநுத மகான்
(கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி – கலைஞர்
தொலைக்காட்சியில் வெளியான தொடர்)

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.

கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தனது 92-வது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.

The post படைப்பு பெட்டகம் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/feed/ 0