நிறைந்து வாழும் கலைஞர் – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Sun, 18 Aug 2019 14:41:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர் /2019/08/05/kalainars-fame/ /2019/08/05/kalainars-fame/#respond Mon, 05 Aug 2019 10:59:51 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=2084 The post வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர்!

தி.மு.க செயற்குழுத் தீர்மானம்

தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட, தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.8.2018 – செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கூடியது. கூட்டத்தில் முதல் நிகழ்வாக – மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்குக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக முன்னோடிகளும் மலர் தூவி வணங்கினார்கள்.

அதனையடுத்து, அவசரச் செயற்குழுக் கூட்டத்துக்குக் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தலைமையேற்குமாறு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. முன்மொழிந்தார். அதனை, கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. வழிமொழிந்தார்.

அதனையடுத்து , ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் இதய பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கும் தனிச் சிறப்புத் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. படிப்பார்’ என, கழகச் செயல் தலைவர் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து. நீண்ட, உருக்கமான தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. படித்தார். அந்தத் தீர்மானம் படித்து முடிக்கப்பட்டதும் – அதனை நிறைவேற்றும் வகையில், அனைவரும் எழுந்து நின்று, சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.

இரங்கல் தீர்மானம்

தமிழினத்தின் தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞர், பன்முக ஆற்றல் களஞ்சியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் ஆற்றிய அளப்பரிய பணிகளின் காரணமாக, தொண்டால் பொழுதளந்து பொது வாழ்வில் ஈடுபடுவோர் அனைவரும் பார்த்துப் படித்துப் பயிற்சி பெற்றுப் பின்பற்ற வேண்டிய அரசியல் பண்பாட்டுப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார்

     தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் எண்ணிலா முற்போக்குச் சட்டங்களையும் முன்னோடித் திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து, அரசு நிர்வாக வரலாற்றில் நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார்; அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் ஏற்படுத்தும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி யிருக்கிறார். பொதுப் போக்குவரத்து நாட்டுடைமை, இலவச நிலம் – குடியிருப்பு மனைப்பட்டா உள்ளிட்ட நிலச் சீர்திருத்தம், கல்வி – வேலைவாய்ப்பு – தொழில் வளர்ச்சி – அடிப்படைக் கட்டமைப்பு – விவசாயிகளின் நலனுக்காக முதன் முதலில் சட்டமன்றத்தில் நங்கவரம் பிரச்சினை பற்றிய கன்னிப் பேச்சு தொடங்கி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விவசாயிகள் – வேளாண்மை முன்னேற்றத் திற்குக் கையெழுத்திட்ட மகத்தான திட்டங்கள் வரையிலான தலைவர் கலைஞர் அவர்களின் பிரமிப்பூட்டும் சாதனைப் பட்டியலை எடுத்துரைப் பதற்கு ஏடுகள் போதாது.

      

கைரிக்சா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் அமைத்தது உள்ளிட்டவையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கடைக்கோடி கிராமம் வரை மின் இணைப்புகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு தன்னிறைவுத் திட்டங்களும், ஊராட்சிகள் தோறும் நூலகங்கள், சென்னையில் உலகத் தலைவர்கள் பார்த்து வியந்த சர்வதேசத் தரத்திலான ஆசியாவின் மிகப்பெரிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் எனத் தலைவர் கலைஞர் அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் கிராமங்களின் நீடித்த – நிலைத்த வளர்ச்சிக்கும் (Sustainable Growth), நகரங்களின் முழுமையான கட்டமைப்பு வசதிகளுக்கும் (All-round Growth) பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்.

தமிழகத்தில் முதன்முதலில், சட்ட நாதன் கமிஷன் அமைத்துச் சமூகநீதிக்கு அசைக்க முடியாத அடித்தளம் ஏற்படுத்தி, தொடர்ந்து காலந்தோறும் உரிய பலன்கள் கிடைக்கச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். கல்வி – வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியின மக்களுக்கான இடஒதுக்கீடு களை அளித்து, அவர்தம் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காக இறுதிமூச்சு வரை அயராது பாடுபட்ட சமூகநீதிப் போராளி தலைவர் கலைஞர் அவர்கள்.

The post வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/05/kalainars-fame/feed/ 0
தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! /2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/ /2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/#respond Sun, 04 Aug 2019 16:55:57 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=2182 The post தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! – திரு மு.க.ஸ்டாலின்

தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென்ற உணர்வோடு,இந்த அவசரச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு தொடக்கத்திலேயே இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அத்தனை பேரும் எழுந்து நின்று நம்முடைய அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறோம்.

பின்னர், தலைவர் அவர்களோடுநெருங்கிப்பழகிய சிலமூத்த மாவட்டக்கழகத்தினுடைய செயலாளர்கள், இயக்கத்தினுடைய முன்னோடிகள் நேரத்தின்அருமையைக் கருதி குறிப்பிட்ட ஒரு சிலரைஅழைத்து அவர்களும் இங்கே உரையாற்றி,அதைத்தொடர்ந்து நம்முடைய துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்அவர்கள், அதற்குப் பின்னால் நான் உரையாற்றக்கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.நிறைவாக, நம்முடைய பொதுச் செயலாளர் உரையாற்ற வேண்டும் என்ற நிலையிலே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர் அவர்கள், நான் பேச முடியாது, அந்தச் சூழ்நிலையில் நான் இல்லை. எனவே, யாரும் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று என்னி டத்திலே ஏற்கனவே சொல்லியிருக் கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியவர் கள் எல்லாம் குறிப்பிட்டதைப்போல, தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, நீங்களெல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள், நான் தலைவரை மட்டும் அல்ல; தந்தையையும் இழந்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, உடல் நலிவுற்ற நிலையில் தொண்டையிலே ஓர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பேச முடியாத நிலையிலே இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவருடைய அன்பைப் பெற்று, ஆதரவைப் பெற்று அவருடைய வாழ்த்துகளோடு, செயல் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளில் நான் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.

கட்சியின் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட கள ஆய்வு!

அந்த அடிப்படையிலே ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்திட வேண்டுமென்று முடிவெடுத்து, கழக அமைப்புகளை அறிவாலயத்திற்கு இதே கலைஞர் அரங்கத்திற்கு அழைத்து, ஏறக்குறைய இரண்டு, மூன்று மாத காலம் நான் ஆய்வு நடத்தியிருக்கிறேன். கட்சியினுடைய வளர்ச்சிக்காக, கட்சியில் மேலும் புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அந்த ஆய்வு நிகழ்ச்சி நடந்தது.

 

அந்த ஆய்வின் ஒவ்வொரு கூட்டத்தி லும் ஒவ்வொரு மாவட்டக் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக, பேரூர்க் கழக நிர்வாகிகளோடு நான் கலந்து பேசுகிறபொழுது நிறைவாக அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, அனை-வரும் ஒற்றுமையாக இருந்து – ஒன்றுபட்டு உழைத்து – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரக்கூடிய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை மலரச்செய்து அப்படி மலருகின்ற அந்தச் சாதனையைத் தலைவர் இடத்தில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.அவருடைய காலத்திலேயே அவருடைய காலடியில் கொண்டுசென்று நம்முடைய வெற்றியைக் குவிக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு கூட்டத்திலும் எடுத்துச் சொன்னேன்.

தலைவருக்கு அளித்த உறுதியைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு!

அண்மையில் ஈரோட்டில் நடை பெற்ற நம்முடைய மண்டல மாநாட்டில்கூட, நான் உரையாற்றுகிறபோது நிறைவாக குறிப்பிட்டுச் சொன்னேன் விரைவில் கழக ஆட்சியை உருவாக்குவோம் – ஆட்சியை தலைவருடைய காலத்திலேயே உருவாக்கி அவரிடத்தில் கொண்டுசென்று ஒப்படைப்போம் என்று சொன்னேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாத நிலையிலே இன்று தவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஏக்கத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

தலைவர் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்குப் பக்கத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல – தலைவருடைய முடிவு! தலைவர் எண்ணிய எண்ணம்! அவருடைய ஆசை! அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எல்லாம் எங்களிடத்திலே வந்துசொல்லுகிறார்கள்.‘இவ்வளவு நேரம் தான் அவர் உயிர் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது’ என்ற அந்த நிலை வருகிற போது இனி காப்பாற்றவே வழியில்லை, முடிந்த வரையில் நாங்கள் போராடி வருகிறோம் என்று டாக்டர்கள் கூறிய அந்தச் சூழ்நிலையில் நாங்கள் எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.சோகத்திலே கண்ணீர் மல்க மருத்துவர்களோடுநாங்கள் பேசிக்கொண்டிருந்தாலும் நம்முடைய முன்னோடிகள் எல்லாம் தலைவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது பல நண்பர்கள் மூலமாகத் தமிழக அரசுக்குச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறோம்.

ஆனால் அங்கிருந்து எங்களுக்கு வந்த செய்திகள் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையிலே தான் இருந்தது. அதற்குப் பிறகு நம்முடைய முன்னோடிகள் எல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள் நாம் நேரடியாக முதலமைச்சரைச் சந்திப்போம் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தால் நிச்சயமாக அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள் என்று சொன்னபோது நான் தயாரானேன்.

தலைவருக்காக எதையும் இழக்கத் துணிந்தேன்!

அப்பொழுது நம்முடைய முன்னோடிகள் எல்லாம் சொன்னார்கள். நீங்கள் வரவேண்டாம் நாங்கள் போகிறோம் – நீங்கள் செயல் தலைவர் – நீங்கள் தலைவருடைய மகன் – நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வரக்கூடாது. அவர்களைச் சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில் இல்லை இல்லை என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன் வந்தே தீருவேன் என்று சொல்லி நாங்களெல்லாம் முதலமைச்சரைச் சென்று சந்தித்தோம். சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துச் சொல்கிறோம்.

முதல்வரின் கரங்களைப் பற்றிக் கொண்டு வேண்டினேன்!

நம்முடைய கோரிக்கையை எடுத்துச் சொல்கிறபோது முதலமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளை முடக்க வாய்ப்பில்லை, நாங்கள் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள் என்றார். நான் அப்போது சொன்னேன், அரசு போடக்கூடிய, அரசு எண்ணக் கூடிய அந்த எண்ணத்தைத்தான் சட்ட ஆலோசகர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே, நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம்.

இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன், முதலமைச்சருடைய கைகளைப் பிடித்து நான் கெஞ்சிக் கேட்டேன், தலைவருடைய ஆசை – அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம், அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன்.

அப்பொழுதுகூட அவர்கள், சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக அங்கிருந்து எங்களை விரட்டிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்போம் என்று ஒரு வார்த்தை சொன்னார்கள், அதை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.

மருத்துவமனையிலே வந்து அமர்ந்து இருக்கிறோம். சரியாக 06.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே வந்து சொன்னார்கள். உடனடியாக, ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் நம் முன்னோடிகள் சிலரோடு அந்தக் கடிதத்தைக் கையில் கொடுத்து – முறையாகக் கேட்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் வீட்டுக்கு அனுப்பு கிறோம். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து விட்டார்கள், என்ன? என்று கேட்கிறோம். மறுத்துவிட்டார்கள்! என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொல்கிறார்கள். எங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம், தொலைக்காட்சிகளில் செய்திகள் வருகிறது. தலைமைச் செயலாளர் அவர்களுடைய அறிவிப்பு வருகிறது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் வழங்கிய வாக்குறுதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்குப் பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது, என்று தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவருகிறது. பார்த்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளானோம். பேசிக்கொண் டிருக்கிறபோது, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உள்ளே வருகிறார். அவரிடத்திலே விவாதித்தோம்; நான் நீதிமன்றத்திற்குச் செல்லட்டுமா? என்று கேட்கிறார். முடியுமா? என்று கேட்டோம். இல்லை,நாங்கள் இரவே நீதிபதியைச் சென்று சந்திக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே சென்றார்கள்.

பிளாஷ் நியுஸ் பார்த்து கழகத்தினர் ஆரவாரம்!

அதற்குப் பிறகு 10.30 மணிக்கு விசா ரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.அதற்குப் பிறகு, மறுநாள் காலை 8.30மணி அளவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இங்கு இருக்கக்கூடிய நம்முடைய வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் அவர்கள், விடுதலை அவர்கள், என்.ஆர். இளங்கோ அவர்கள் இன்னும் நம்முடைய கழக வழக்கறிஞர்கள் சிலர் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய வில்சன் அவர்களுடைய தீவிர முயற்சியின் காரணமாக 10.30 மணிக்குத் தீர்ப்பு வருகிறது. அண்ணா அவர்களின் சமாதிக்கு அருகிலே தலைவர் கலைஞர் அவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற தீர்ப்பு வருகிறது. நாங்கள் தலைவரின் உடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அழுது கொண்டிருக் கின்றோம். எங்களுக்குக் கூட இந்தச் செய்தி முதலில் வரவில்லை. ஆனால், எதிரிலே இலட்சக்கணக்கிலே திரண்டிருக்கக்கூடிய நம்முடைய தோழர்களிடத்தில் இருந்த செல்போனில் ஃபிளாஸ் நியூஸ் என்கிற அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு அவர்கள் முழங்குகிறார்கள்!

கழக வழக்கறிஞர் அணிக்கே பெருமைகள் அனைத்தும்!

பின்னர், செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியைக் கேட்டு இவ்வளவு பெரிய சோகச் சூழலிலும் அன்றைக்கு நம் எல்லோருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. உள்ளபடியே, எனக்கு நன்றி சொன்னீர்கள், என்னைப் பாராட்டினீர்கள். என்னைப் பொறுத்தவரையிலே, நான் நம்முடைய வழக்கறிஞர் குழுவிற்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்தப் பெருமை சேரும் – சேரும் – சேரும் என்று நான் இந்த நேரத்திலே சொல்லுகின்றேன்.

அன்று தலைவர் கூறியது!

நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு, அதிலும் குறிப்பாக, ஒருமுறை நம்முடைய கொடிக்கு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அது நமக்கு உரிமை உண்டா? எனும் வழக்கு. கொடியும் பயன்படுத்தக்கூடாது, கட்சியினுடைய பெயரைப் பயன்படுத்தக்கூடாது, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையிலே, தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையின் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தது.

அந்தத் தீர்ப்பு வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களிடத்தில் சொல்லுகிறார். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், நான் அண்ணாவினுடைய சமாதிக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டிருப்பேன், நீங்கள் எல்லாம் வந்து எனக்கு மலர்வளையம் வைத்திருப்பீர்கள் என்று கூறினார். அதைத்தான் நான் எண்ணிப் பார்த்தேன்.

ஒருவேளை நமக்குத் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று சொன்னால், அந்தத் தலைவர் கலைஞருக்குப் பக்கத்திலே என்னைப் புதைக்கக்கூடிய சூழ்நிலைதான் நிச்சயமாக உருவாகியிருக்கும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நிலை வரவில்லை.

தலைவர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்!

தலைவர் கலைஞருடைய எண்ணம், அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மறைந்தும் இந்தப் போராட்டத்திலே வெற்றி பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையிலே அவருக்கு, இன்றைக்கு நாமெல்லாம் வணக்கத்தை, நம்முடைய அஞ்சலியை – திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மூலமாக நாம் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்திருக்கக்கூடிய உங்களை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை உறுப்பினர்களையும் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, தலைமைக் கழகத்தின் சார்பில் என்று சொல்வதைவிட நம்முடைய இதயத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய, நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கலைஞர் வழி நின்று நம்முடைய கடமையை ஆற்றுவோம் என்பதுதான்.

தலைவர் கலைஞர் அவர்களை உங்களுடைய உருவிலே நாங்கள் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருடைய எண்ணங்களை அவருடைய செயல்பாடுகளை, அவருடைய நினைவுகளை, அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்ச்சிகளை, அந்த உணர்வுகளைக் காப்பற்ற உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்

The post தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/feed/ 0
வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! /2019/08/04/parliament-adjourns-for-the-first-time-in-history/ /2019/08/04/parliament-adjourns-for-the-first-time-in-history/#respond Sun, 04 Aug 2019 16:34:58 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=910 The post வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக எம்.பி.யாகவோ, அல்லது முன்னாள் எம்.பி.யாகவோ இல்லாத மறைந்த முதல்வர் கலைஞருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கலைஞர் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி ரத்த அழுத்தக் குறைபாடு காரணமாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கலைஞர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் முதுமை காரணமாக அவரின் உடல்உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், நேற்று மாலை 6.10மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.

கலைஞரின் மறைவுக்குப் பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் கலைஞரைப் போற்றினர்.

இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும், எம்.பி.யாக இருந்தவருக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கலைஞர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவை கூடியதும் கலைஞர் மறைவு குறித்த செய்தியை வாசித்து, இரங்கல் தெரிவித்தார். மேலும், அவையை ஒத்திவைப்பது குறித்துப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி, அவை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்து அறிவித்தார்.

கலைஞர் நாட்டின் தலைசிறந்த தலைவர், உயர்ந்த தலைவர் அவருக்காக நாடாளுமன்றத்தை ஒருநாள் ஒத்திவைப்பதை ஏற்கிறோம் எனப் பல்வேறு கட்சித் தலைவர் களும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

முன்னதாக, திமுக தலைவர் கலைஞர் குறித்து புகழாரம் சூட்டி வெங்கையா நாயுடு பேசினார். இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,

5 முறை முதல்வராகவும் கலைஞர் செயல்பட்டவர். அதுமட்டுமல்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கலைஞர்.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப் பேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது என்று புகழாரம் சூட்டினார்.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறித்தும், கலைஞர் மறைவு குறித்தும் அறிவிக்கப்பட்டது. மக்களவையிலும் கலைஞர் மறைவு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பின் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பதை அரசு ஏற்கிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மக்களவையையும் ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

The post வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/04/parliament-adjourns-for-the-first-time-in-history/feed/ 0
மத்திய அமைச்சரவை தீர்மானம் /2019/08/02/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/ /2019/08/02/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/#respond Fri, 02 Aug 2019 19:00:54 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1209 The post மத்திய அமைச்சரவை தீர்மானம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

மத்திய அமைச்சரவை தீர்மானம்

9.8.2018 அன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. அக்கூட்டத்தில் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

“”””கலைஞர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது மறைவால் நாடு புகழ் பெற்ற ஒரு மூத்த தலைவரை இழந்துவிட்டது. ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் இருந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற கதாசிரியராகத் திகழ்ந்தார். எழுத்து மற்றும் பேச்சாற்றலில் புகழ்பெற்று விளங்கினார். அவரது மறைவால் தமிழகம் செல்வாக்கு மிக்க தலைவரை இழந்துவிட்டது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் இந்திய அரசின் சார்பிலும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பிலும் மத்திய அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது”” என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

The post மத்திய அமைச்சரவை தீர்மானம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/feed/ 0
மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் /2019/08/01/among-the-great-leaders-the-chief/ /2019/08/01/among-the-great-leaders-the-chief/#respond Thu, 01 Aug 2019 18:26:04 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=905 The post மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

மகத்தான தலைவர்களில் முதன்மையானவர்!

திரு.ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர்

கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். ‘கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமை மிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தாருக்கும் மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.வெங்கையா நாயுடு

குடியரசுத் தலைவர்

இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை முதல்வராகவும் கருணாநிதி செயல்பட்டவர். அது மட்டுமில்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி.தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப் பேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது

திரு.நரேந்திர மோடி

பிரதமர்

கலைஞர் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர். ஏழை எளியோரின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட அவர் மக்கள் செல்வாக்கு மிக்கவர். ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர்.

கலைஞர் கருணாநிதியோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சமூக நீதி நிலைபெறும் வகையில் மிகச்சிறந்த கொள்கைகளை வகுத்த

மேதைமை கொண்டவர் அவர். ஜனநாயக மாண்புகள் நிலைக்கும் வகையில் நெருக்கடி நிலையைத் துணிவோடு எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியதற்காக அவர் என்றும் சரித்திரத்தில் உயிர்த்திருப்பார்

தேச முன்னேற்றத்தோடு பிராந்திய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அரும்பாடுபட்ட தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழர்கள் வாழ்வு மேம்படுவதையே இலக்காகக் கொண்டவர். எதிலும் தமிழகம் முதன்மை பெறுவதை உறுதிசெய்தவர்

இந்தத் துயர்மிகுந்த வேளையில் அந்த உயர்ந்த தலைவரின் குடும்பத்தாருக்கும் எண்ணிலடங்காத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கலைஞரின் மறைவு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

திரு.பிரணாப் முகர்ஜி

முன்னாள், குடியரசுத் தலைவர்

கலைஞர் அவர்கள் இறந்து விட்டார் என்ற தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில், அவரது மாநிலத்திலும், தேசிய அளவிலான அரசியலிலும் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை எண்ணும் போது கடினமாக உள்ளது.

60 ஆண்டுகளுக்கும் மேலாகசட்டமன்ற உறுப்பினராக, 5 முறை முதல் அமைச்சராக இருந்த அவர் மத்தியில் கூட்டணி ஆட்சிகள் அமைவதற்கு வலுவான தூணாகத்

திகழ்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ஒரு நவீன இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகித்த வெகுசிலரில் கலைஞர் அவர்களும் ஒருவராக இருந்துள்ளார்.

அவரது மறைவின் மூலம் தமிழக மக்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்டு மக்களுமே ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட ஒருவரை இழந்துள்ளனர். அத்துடன் கூட்டாட்சியின் நெறிகளையும் முழுமையாக உணர்ந்தவர் அவர். என்னுடைய நண்பரும், அன்பிற் கினியவருமான கலைஞருடனான என்னுடைய தொடர்புகள் எப்போதுமே என்னிடத்தில் நினைவில் பசுமையாக இருந்து கொண்டே இருக்கும்.

திரு.மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர்

கலைஞர் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற தகவல் அறிந்து நான் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவின் மூலம் இந்த நாடு ஒரு மாபெரும் தலைவரை இழந்து விட்டது. அவர் ஒரு திறமைவாய்ந்த கலைஞர், சிறந்த எழுத்தாளர் என்பதோடு, சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் என்றென்றும் உழைக்கக் கூடிய ஒரு உன்னதத் தலைவர்.

பொது வாழ்வில் தன்னேரில்லா ஒரு சிறந்த தலைவர். இந்த நாட்டிற்கும் குறிப்பாக, தமிழக மக்களுக்கும் பன்முகத் தன்மைகளோடு செயலாற்றிய ஒரு சிறந்த நிர்வாகி. நான் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால் கலைஞர் அவர்களை நான் பெரிதும் மதிப்பேன்.

இந்த நாட்டிற்கு அவர் செய்த சேவைகள் மூலம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் நினைவுகூரத்தக்கவராக இருப்பார்.

திருமதி.சோனியா காந்தி

தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி

அரசியல் உலகத்திலும், பொது சேவையிலும் உன்னதமான தலைவராக கலைஞர் இருந்தார். அவரது மறைவு, எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. அவர் எப்போதும், என்னிடம் மிகுந்த அன்பையும், பரிவையும் காட்டியவர். அதை என்னால் மறக்க முடியாது. அவர் எனக்குத் தந்தையைப் போன்றும் இருந்தார்.

கலைஞர் போன்ற நபரை நாம் மீண்டும் பார்க்க முடியாது. அந்த அரசியல் மேதை, அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாதது இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு.

கலைஞர் அவர்கள் மிகச்சிறந்த இலக்கியவாதி. தமிழகத்தை வளமாக்கியதிலும், பண்பாடு மற்றும் கலையை வளர்த்து

உலகளவிலான அங்கீகாரம் கிடைக்கச் செய்ததிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

கலைஞர் அவர்கள் தமது நீண்ட சிறப்பான வாழ்க்கையில், சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும், தமிழகத்தின்

வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட ஒவ்வொரு வரின் நலனுக்காகவும் பாடுபட்டார்.

திரு.ராகுல்காந்தி

தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் மேடையில் ஒரு பிரம்மாண்டமாக இருந்து செயல்பட்டவர் கலைஞர். தமிழக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். அவரது மறைவால் இந்தியா ஒரு பெரிய புதல்வனை இழந்துவிட்டது.

அவரது மறைவுக்காக என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும், அவரால் விரும்பப்பட்ட லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.எல்.கே.அத்வானி

மூத்த தலைவர், பாரதிய ஜனதா கட்சி

மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் கருணாநிதி உயர்வான குறிக்கோள்களைக் கொண்டு இருந்தார். அரசியலில் மட்டுமல்ல தமிழுக்காகவும் சிறப்பான பணிகளை ஆற்றி உள்ளார்.

திரு.அமித்ஷா 

தலைவர், பாரதிய ஜனதா கட்சி

நெருக்கடி நிலை காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் போராட்டத்தை யாராலும் மறக்க முடியாது.

திரு.சரத்பவார்

தலைவர், தேசியவாத காங்கிரஸ்

இந்திய அரசியல் சாம்ராஜ்யத்தில் வெகுஜன மக்களின் தலைவராக அவர் என்றும் நிலைத்து நிற்பார்.

திரு.டி.ராஜா

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி

80 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கலைஞர் தமது வாழ்க்கையைத் தமிழகத்தின் வரலாறாக மாற்றினார்.

மார்க்சிஸ்ட் கட்சி 

அரசியல் தலைமைக்குழு

நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக் காகவும் மாநிலங்களின் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் வீர முதல்வராக விளங்கி உறுதியுடன் போராடினார் கலைஞர். நாடு தழுவிய அளவில் கூட்டணி அரசியலை வடிவமைத்தத்திலும் முக்கியப் பங்கை ஆற்றினார். பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை மாண்புகளை உயர்த்திப் பிடித்தவர் கலைஞர்.

திரு.குமாரசாமி 

கர்நாடக முதலமைச்சர்

கலைஞரின் இழப்பு ஒட்டு மொத்த இந்திய தேசத்துக்கே பேரிழப்பு

திரு.சந்திரசேகர ராவ்

தெலுங்கான முதலமைச்சர்

அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒரு சில தலைவர்களில் ஒருவரான கலைஞரின் இழப்பு பேரிழப்பு.

திரு.அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர்

தமிழர்களின் தலைவரான கலைஞர் மறைவு இந்த நாட்டிற்கே பேரிழப்பு

திரு.தேவேந்திர பட்நவிஸ்

மகாராஷ்டிரா முதலமைச்சர்

தமிழக அரசியலைப் புதிய திசைக்கு மாற்றிய புகழ்மிக்க தலைவர் கலைஞர்.

திரு.நிதிஸ்குமார் 

பீகார் முதலமைச்சர்

ஜனநாயகத்தின் மதிப்பையே உச்சமாகக் கருதும் மிகப்பெரிய அரசியல் தலைவரை நாடு இழந்து விட்டது.

திரு.விஜய் ரூபானி

குஜராத் முதலமைச்சர்

கலைஞர் கருணாநிதி மறைந்துவிட்டார் என்ற செய்தியே என்னை வேதனையில் ஆழ்த்திவிட்டது.

செல்வி.மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர்

இந்தியா மிகச் சிறந்த மகனை இழந்துவிட்டது. தமிழகம் தனது தந்தையை இழந்துவிட்டது.

திரு.பினராயி விஜயன் 

கேரள முதலமைச்சர்

தேசிய அளவில் மிகச் சிறந்த அரசியல் தலைவர் கலைஞர். அவர் அரசியலுக்கு ஆற்றிய பணிகள் மட்டுமல்ல; இலக்கியப் பணிகளும் மறக்க முடியாதவை.

திரு.வி.நாராயணசாமி 

புதுச்சேரி முதலமைச்சர்

இந்தியாவில் பல பிரதமர்களை உருவாக்கியவர் அவர். தமிழர்களின் பாதுகாவலராகப் போற்றப்பட்டார்.

திரு.சந்திரபாபு நாயுடு

ஆந்திரா முதலமைச்சர்

மூத்த திறமையான அரசியல்வாதியை நாம் இழந்துவிட்டோம். மக்கள் சேவையை இறுதிமூச்சாகக் கொண்டு உழைத்தவர் அவர். அவரது மறைவு எனக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

The post மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/01/among-the-great-leaders-the-chief/feed/ 0
பாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி /2019/07/31/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87/ /2019/07/31/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87/#respond Wed, 31 Jul 2019 18:00:48 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1212 The post பாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

பாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி

நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா

றைந்த தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா நேற்று வலியுறுத்தினார். இதற்கு மற்ற கட்சி உறுப்பினர்களும் மேசைகளைத் தட்டி வரவேற்று ஆதரவளித்தனர். இது குறித்து மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசியதாவது:

இந்நாட்டின் உயர்ந்த அரசியல் தலைவரும், மாபெரும் திராவிடத் தலைவருமான கலைஞர் அவர்கள் தம் 95 வயதில் காலமாகி உள்ளார். இதில், அவர் தம் 80 வருட காலத்தைப் பொதுவாழ்க்கைக்காக அர்ப்பணித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடினார்.

ஐம்பது வருட காலங்கள் எந்தத் தடையும் இன்றி ஓர் அரசியல் கட்சியின் 

தலைவராக இருந்தார். அவரது நீண்ட சாதனைப் பட்டி யல் அவரது கிரீடத்தின் தோகை களாக மிளிர்கின்றன. அவர் ஓர் ஆற்றல் மிகுந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர்

நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், தத்துவஞானி, கொடை அளிப்பவர், நாடகக் கலைஞர் மற்றும் நடிகராகவும் இருந்தவர்.

80 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அனைத்துத் துறைகளிலும் ஈடுஇணையற்ற சாதனையாளர். அவர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சாதனைகள் படைத்தவர். சமூகப் போராளியான அவர் தம் இறுதி நாட்கள் வரை சமூகநீதி, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றுக்காகப் போராடியவர்.

ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்தவர். அவர் இயற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்கள் என்றும் அவரை நினைவு கூர்பவை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு, விதவைகள் மறு வாழ்வு, குடிசை மாற்று வாரியம் மற்றும் அங்கீகரிக்கப்படாத பலருக்கான வாரியங்கள் போன்ற புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மேற்கொண்டார். 

சமூகத்தில் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டுவந்த திருநங்கைகளை மதிப்புமிக்க புதிய பெயருடன் அழைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கும் அதைச் செய்தார்.

இவை எல்லாம் மிகைப்படுத்திக் கூறப்படுபவை அல்ல. மாறாக, அனைத்தும் வரலாறு. தம் கொள்கைகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்காதவர். அதே சமயத்தில் மனித உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். 

எனவே, அவருக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருதினை அளித்துக் கவுரவப் படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இது, நாட்டிற்குத் தொண்டாற்றிய அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

The post பாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/31/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87/feed/ 0
அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம்! /2019/07/30/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ /2019/07/30/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Tue, 30 Jul 2019 20:13:26 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1235 The post அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம்!

காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. அதற்கான இரங்கல் தீர்மானத்தை இல்லினாய்ஸ் மாநிலப் பிரதிநிதியான டேனி கே. டேவிஸ் வாசித்தார்.

அந்த இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :-

1924, ஜூன் 3ஆம் தேதி பிறந்து 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்த புகழ்பெற்ற மனிதரான முத்துவேல் கருணாநிதி பற்றித் தமிழ் அமெரிக்க வாக்காளர்கள் சிலர், என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

முத்துவேல் கருணாநிதி தமது 14ஆம் வயதிலேயே சமூக நீதிப் பிரச்சினைகளில் ஈடுபட்டவர். கையால் எழுதிய பத்திரிகை ஒன்றை வெளியிட்டு அதன்பின் அதையே வார 

இதழாகவும் வெளியிட்டு வந்தவர். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட 92வது வயது வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.

முத்துவேல் கருணாநிதி தமிழ் மொழியில் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பதிப்பாளராக, சொற்பொழிவாளராக, நாவல் எழுத்தாளராக மற்றும் இலக்கிய விமர்சகராகத் திகழ்ந்தார். அவருடைய புத்தகங்கள் பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின. 

அவருடைய திரைப்படங்களின் திரைக்கதை வசனங்கள், அரசியல் வாய்ப்புகளுக்கான பழைய எல்லைகளை உடைத்து, மனித உறவுகளின் புதிய பார்வையைத் தெளிவாக வெளிப்படுத்தியது

அரசியல் பொறுப்புகளுக்காக அவர் 13 முறை தேர்தலில் போட்டியிட்டார். 

70 ஆண்டுகளில் அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் ஒரு முறைகூட தோற்றதில்லை. அவர் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்துமுறை பதவி வகித்தார். அவருடைய பணி வாழ்நாள் முழுவதும் சாதிமுறையில் ஏற்படும் தடைகளை உடைப்பதிலேயே உறுதி கொண்டிருந்தது. 

அதிலும் சிறப்பாக மனிதக் கழிவைக் கையாளும் தாழ்நிலையில் இருந்த மக்களுக்காகப் போராடினார். அவர்களை மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறச் செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களும் மருந்துகளைக் கையாளும் நிலையை ஏற்கச் செய்தார். அவர் 1972ஆம் ஆண்டு சிகாகோ நகருக்கு வருகை தந்தார்.

முத்துவேல் கருணாநிதி சமூக ஏணியின் தாழ்நிலையிலிருந்து தோன்றி, அரசியல் மலைகளின் உயரங்களுக்கு ஏறிச் சென்றவர். ஆனால், அப்போதும் தமது வாழ்க்கை முறையை எளிமையாகவே வைத்துக் கொண்டவர். 

அவருடைய சிந்தனைகளும், செயல்களும் அவருடைய எல்லா மக்களுக்கும் பயன்படும் நிலையில் அவர்களுடைய மிக உயர்ந்த ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப நிலை நிறுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு டோனி கே.டேவிஸ் தமது இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/30/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
தமிழக அரசு அறிவிப்பு /2019/07/28/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ /2019/07/28/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond Sun, 28 Jul 2019 15:07:23 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1228 The post தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும், ஏழு நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பொதுநிறுவனங்கள் அனைத்திற்கும் 8.8.2018 அன்று பொதுவிடுமுறை என அரசு அறிவித்தது.

The post தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/28/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/ 0
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் /2019/07/27/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9/ /2019/07/27/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9/#respond Sat, 27 Jul 2019 19:05:00 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1225 The post முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகாலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களுடைய மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராட்டத் தக்க அளவில் பணியாற்றியிருக்கின்றார். அவர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மக்கள் நலன் கருதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்கள் வரவேற்றிருக்கின்றோம். அதேசமயத்தில், கொள்கை ரீதியில் மாறுபாடு இருக்குமேயானால், அதனை நாங்கள் எதிர்த்தும் இருக்கின்றோம். 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அதேபோல நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், நானும் 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்மாமன்றத்தில் காலடி எடுத்து வைத்த போது, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். அப்போது நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், சட்டமன்றப் பேரவை உறுப்பினர்

திரு. ஆர். சிங்காரம் அவர்கள் உரையாற்றியபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக இங்கே அறிவித்திருக் கிறார்கள். இது ஒரு அரை இலட்சம்தான், ஆனால், நம்முடைய லட்சியம் லட்சம். இந்த லட்சத்தை வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே லட்சியமாக அறிவிப்பதற்கும், இன்னும் பல கோரிக்கைகளைச் செய்வதற்கும் நம்முடைய முதல்வர் அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனே பதிலளித்த அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், “”””என்னுடைய லட்சியம் உறுப்பினர் திரு. சிங்காரம் அவர்கள் நீண்ட காலம், பல ஆண்டு காலம், பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும் என்பதுதான்”” என்று சொன் னார்கள். கோரிக்கையை அப்போது ஏற்கவில்லை என்றாலும், கோரிக்கை வைத்தவர்கள் மனம் மகிழ்கின்ற வகையில் பதில் சொல்கின்ற வல்லமை பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். எளிய தோற்றம், இனிய பண்பு, எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய குணம் அவரிடம் அமைந்திருந்தது. 

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த திரு. ஜவஹர்லால் நேரு முதல் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி வரை அனைத்துப் பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு.

The post முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/27/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9/feed/ 0
தமிழரின் புகழ் வானம் இடிந்தது /2019/07/27/the-sky-of-the-fame-of-the-tamils-fell/ /2019/07/27/the-sky-of-the-fame-of-the-tamils-fell/#respond Sat, 27 Jul 2019 18:17:35 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=898 The post தமிழரின் புகழ் வானம் இடிந்தது appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தமிழரின் புகழ் வானம் இடிந்தது

திரு.பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநர்

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர் அவர். கடந்த 70 ஆண்டுகளாக இருந்த பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பிரபலமானவராகத் திகழ்ந்தார். தமிழக மக்களின் துயரத்தில் இந்திய நாடே பங்கெடுக்கிறது.

திரு.கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் பொதுவாழ்விலும் திராவிட இயக்க வரலாற்றிலும் நின்று நிலைத்துப் பேசப்படும் பெருமைக்குரிய தலைமகன் தலைவர் கலைஞர். எவரும் எளிதில் எட்டமுடியாத இமயத்துக்கு உயர்ந்தார் என்றால், அதற்குக் காரணம் அவரின் உழைப்பு. நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் அந்தப் பகுத்தறிவாளர்.

திரு.எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சர்

கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தது அறிந்து நான் வேதனை அடைந்தேன். அரசியல் மட்டுமின்றி தமிழ் இலக்கியம், தமிழ்த் திரைப்படம் ஆகியவற்றில் திறமையை வெளிப்படுத்தியவர் கலைஞர். தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் முத்திரை பதித்தவர். அவரது மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பாகும்.

திரு.சு.திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

சமூக நீதிக் காவலராய், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் கேடயமாய்த் திகழ்ந்தவர். சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை நல்கி, சொத்தில் சம பங்கு தந்தவர் கலைஞர். தமிழ்நாடும், தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளவரை அண்ணன் கருணாநிதியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி. தமிழிசை சவுந்தரராஜன்

மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி

அரசியலில் உதயசூரியனாகவும், பல லட்சம் தொண்டர்களின் இதய சூரியனாகவும் விளங்கிய கலைஞர் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கிறது. முத்தமிழ் அறிஞரின் சங்கத்தமிழ் இனிக் கேட்க முடியாது என்பதை நம்பவும் இந்தத் தமிழகம் மறுக்கிறது. தோல்விகளையே காணாத தலைவன் இன்று பல லட்சம் தொண்டர்களின் மனதையும் வென்றுவிட்டுத்தான் சென்று இருக்கிறார். எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் இவரது பங்கு அரசியலில் இருந்திருக்கிறது. அவரது மறைவு தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கே பேரிழப்பு.

திரு.வைகோ

பொதுச் செயலாளர் – மறுமலர்ச்சி தி.மு.க

தமிழரின் புகழ் வானம் இடிந்தது. தமிழரின் சகாப்தம் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. தமிழ் இலக்கிய இமயம் சாய்ந்தது. சங்கத்தமிழும், குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும், பொன்னர்சங்கரும், தென்பாண்டிச்சிங்கமும், பாயும் புலி பண்டாரக வன்னியனும் எனச் செந்தமிழ் மொழிக்கு அழியாக் காவியங்களையும் கலையுலகில் புரட்சிப் படைப்புகளையும் வாசிப்போர் நரம்புகளில் மின்னலைப் பாய்ச்சும் உடன்பிறப்பு மடல்களையும் தீட்டிய எழுதுகோல் ஒடிந்தது. தமிழ்த்தாயின் கரம் ஏந்திய இலக்கிய வீணையின் நரம்பு அறுந்தது. தமிழினம் ஏந்திய வில் முறிந்தது.

திரு.கே.பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கலைஞரின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தலைசிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகை யாளராகவும், கலைத்துறை வித்தகராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.இரா.முத்தரசன்

மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கலைஞர் மறைந்தார் என்ற செய்தி மனதளவில் ஏற்றுக் கொள்ளமுடியாத துயரச் செய்தியாகும். தமது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் எதிர் கொண்டு வெற்றிகண்ட அவர், தமது உடல் நலப் பாதிப்பில் இருந்தும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். நமது நம்பிக்கை பொய்யாகி விட்டபோதிலும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் கருணாநிதி நீங்காமல் நிலைத்து நிற்பார்.

திரு.தொல்.திருமாவளவன்

தலைவர், விடுதலை சிறுத்தைகள்

எண்பது ஆண்டுகள் பொதுவாழ்க்கை; எனினும் ஒவ்வொரு நொடியும் போராட்டம்! எத்தனை எத்தனை இடர்கள்; தடைகள்! எத்தனை எத்தனை சதிகள்; பழிகள்! அனைத்தையும் தகர்த்துத் தவிடு

பொடியாக்கி அரசியல் சிகரத்தின் உச்சத்தைத் தொட்ட ஆற்றலாளர் தலைவர் கலைஞர். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!

திரு.பழ.நெடுமாறன் 

தலைவர், தமிழர் தேசிய முன்னணி

தமிழகத்தின் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

மருத்துவர் ச.ராமதாஸ்

நிறுவனர் – பாட்டாளி மக்கள் கட்சி

தமிழகத்தில் சமூக நீதியை நிலை நிறுத்தியதிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கியதிலும் கலைஞரின் பங்கு மகத்தானது. கடந்த ஜூலை 29-ம் தேதி காவிரி மருத்துவமனைக்கு நான் நலம் விசாரிப்பதற்காகச் சென்றபோது, அவரது உடல்நிலை திடமாக இருப்பதாகவும், விரைவில் இல்லம் திரும்புவார் என்றும் ஸ்டாலின் கூறினார். அவர் விரைவில் நலம்பெற்று வருவார் என நம்பிக்கொண்டிருந்த வேளையில்தான் அவரது மறைவுச் செய்தி நம்மையெல்லாம் தாக்கியிருக்கிறது. அவரின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

திரு.கே.எம்.காதர் மொகிதீன்

திராவிடத் தத்துவத் தலைவராக,

நிறைவான ஜனநாயகவாதியாக, பண்பட்ட பகுத்தறிவு சூரியனாக இருந்த அவரின் ஒவ்வொரு வார்த்தையும் வெற்றி வாழ்வுக்கான 

படிகளாக அமைந்திருக்கின்றன. கருணாநிதியின் மறைவுச் செய்தி தமிழக மக்களுக்குப் பேரிடியாக அமைந்துவிட்டது.

திரு.விஜயகாந்த்

தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்

இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் கலைஞர் காலமானார் என்கின்ற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். அவர் மண்ணுலகு விட்டு மறைந்தாலும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, பழகும் தன்மை, நட்புணர்வு, ஐந்து முறை முதல்வராக இருந்த வரலாறு, அவரது நினைவுகள் காலத்தால் அழியாது.

திரு.எம்.எச்.ஜவாஹிருல்லா

தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

கலைஞரின் மறைவு ஒவ்வொரு தமிழருக்கும் சமூக நீதிப் போராளிகளுக்கும் தனிப்பட்ட இழப்பாகும்.

திரு.டி.டி.வி.தினகரன் 

துணைப் பொதுச் செயலாளர், அமமுக

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

திரு.ஜி.கே.வாசன் 

தலைவர், தமிழர் மாநில காங்கிரஸ்

கலைஞரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் கலைஞர் ஆற்றிய பங்கு சிறப்பானது. அரசியல், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற்றுக்காகச் சமரசம் செய்து கொள்ளாத போராளி அவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.பாரிவேந்தர்

தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி

கலைஞர் இல்லாத தமிழகத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் 

பொதுச் செயலாளர், கொ.ம.தே.க.

கலைஞரின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு ஆகும். 

அவருடைய வாழ்க்கைப் பாதை, அரசியல் பாதை அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். கலைஞரின் மறைவைத் தாங்கக்கூடிய மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும்.

திரு.கமல்ஹாசன்

தலைவர், மக்கள் நீதி மைய்யம்

நாட்டுக்கு ஒரு தலைவரை இழந்ததுபோக, தனிப்பட்ட முறையில் குடும்பத் தலைவரை இழந்துள்ளோம். அந்தத் தமிழைப் பற்றி, மேலே ஏறி வந்தவன் நான்.

திரு.வேல்முருகன் 

தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி

இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி யும், தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவருமான கலைஞரின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

திரு.சுப.வீரபாண்டியன்

தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

கலைஞர் வாழ்வின் முதல் பாகம்தான் முடிந்திருக்கிறது. இரண்டாவது பாகம் இன்றுதான் தொடங்கி இருக்கிறது. அவர் விட்டுச் சென்ற வரலாற்றைக் காலம் எழுதும்.

திரு.எஸ்றா சற்குணம் 

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர், திராவிட மும்மூர்த்திகளில் மூன்றா மாவர், எனது அரசியல் ஆசான்..! என் போன்ற சாமானியர்களையும் ஊக்குவித்து திராவிட இயக்கத்தின் இலட்சியத்தை அடைய தமிழின மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். சமயச் சிறுபான்மையினரின் நம்பிக்கை நாயகன்.

The post தமிழரின் புகழ் வானம் இடிந்தது appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/27/the-sky-of-the-fame-of-the-tamils-fell/feed/ 0